தர்ம போதனை நிகழ்ச்சித் திட்டம் – திரிபிடகாபிவந்தனா வாரம்

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் ஏழாம் நாளை முன்னிட்டு மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர்.திலகரத்ன அவர்களின் தலைமையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி தர்ம போதனை நிகழ்ச்சித் திட்டம் ஒன்று மஹவிலச்சிய பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அநுராதபுரம் மிரிசவெடிய விகாரையின் தலைமை மதகுரு கலைமானி பண்டிதர் மதிப்புக்குரிய ஈதல்வெடுனாவே ஞானதிலக அவர்களால் தர்ம போதனை நிகழ்த்தப்பட்டது.
மஹவிலச்சிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந் நிகழ்வில் பங்குபற்றியதுடன், அங்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான திரிபிடகாபிவந்தனா உறுதிமொழியளித்தலும் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.















