திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட அறநெறி பாடசாலை நிகழ்ச்சிகள்

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் இரண்டாம் நாளை முன்னிட்டு 2019.03.17 ஆம் திகதி திரிபிடக தொடர்பாக அறநெறி பாடசாலை மாணவர்களை தெளிவூட்டுவதற்காக பிரதேச செயலகப் பிரிவின் சகல அறநெறி பாடசாலைகளை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் அறநெறி பாடசாலை மாணவர்களால் திரிபிடகாபிவந்தனா உறுதிமொழியளித்தலும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.
திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பிண்டபாத அன்னதான நிகழ்ச்சிகள்

தேரவாதி திரிபிடகயவை உலக மரபுரிமையாக பெயரிடுவதற்கான முன்மொழிவை முன்வைக்க குறித்த செயற்பாட்டின் ஆரம்பத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட திரிபிடக அபிநன்தன வாரம் 2019.03.16 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த நிகழ்வுகள் மார்ச் 23 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒரு வாரம் முழுமையாக நடைபெறும் பல்வேறு மத நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக பிண்டபாத அன்னதானம் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவின் பேமடுவ ஶ்ரீ சுமங்கல பிரிவெனா விகாரையில் நடாத்தப்பட்டது.
71 வது தேசிய சுதந்திர தின விழா

1948 பெப்ரவாரி 04 ஆம் திகதி இலங்கை திரு நாட்டின் சுதந்திரம் கிடைத்து 71 வது வருட சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வுக்கு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவின் தேசிய தின நிகழ்வுகள் வெகு விமர்சையாக மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர் திலகரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் பணியாளர் குழாத்தின் பங்குபற்றலுடன் 2019.02.04 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் விழாவின் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியத்தை வெளிக்காட்டியதுடன், சுதந்திர வீரர்களை நினைவுகூர்ந்து 02 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பிற்பாடு மஹவிலச்சிய பிரதேச செயலாளரினால் அலுவலக உத்தியோகத்தர்களை நோக்கி அரசாங்க உத்தியோகத்தர்களாக சகலரும் தமது கடமையை சரியாகவும் மற்றும் தியாகத்துடனும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இலங்கையினுல் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தியாகத்துடன் சேவையாற்ற வேண்டும் என்றார். இறுதியாக சகல உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் சிரமதானம் ஒன்று செய்யப்பட்டு 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.















